வெளி மாநில தொழிலாளி மர்மச் சாவு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலத் தொழிலாளி மர்மமான முறையில் வியாழக்கிழமை இறந்துகிடந்தார்.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலத் தொழிலாளி மர்மமான முறையில் வியாழக்கிழமை இறந்துகிடந்தார்.
தே.கல்லுப்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஒடிசாவைச் சேர்ந்த மதன் ஹன்சகா(28) கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மந்தைத்திடலில் மதன் ஹன்சகா மர்மமான முறையில் வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அளித்தப் புகாரின்பேரில் தே.கல்லுப்பட்டி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com