மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ராமநாதன் மனைவி முத்துலட்சுமி (38). இவர் வெளியூர் செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றார். அப்போது அங்கு பேருந்தில் ஏற முயன்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவர் கைப்பையில் வைத்திருந்த 15 பவுன் நகையைத் திருடிச் சென்றனர். அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.