அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாதவூரிலுள்ள அவரது சிலைக்கு அதிமுக (அம்மாஅணி) சார்பில் மேலூர் நகர் செயலர் செ.சரவணன், ஒன்றியச் செயலர்

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாதவூரிலுள்ள அவரது சிலைக்கு அதிமுக (அம்மாஅணி) சார்பில் மேலூர் நகர் செயலர் செ.சரவணன், ஒன்றியச் செயலர் சோமாசி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலர் தர்க்காகுடி சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக (ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.) சார்பில் மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரிபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசன், எஸ்.என்.ராஜேந்திரன், கொட்டாம்பட்டி ஒன்றியச்செயலர் வெற்றிச்செழியன், எஸ்.அம்பலம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திமுகவினர்: அழகர்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரைவடக்கு மாவட்ட திமுக செயலர் பி.மூர்த்தி தலைமையில், மதுரை தெற்கு மாவட்டச்செயலர் மணிமாறன், மேற்கு மாவட்டச் செயலர் சிறைச்செல்வன் உள்ளிட்டோர் மாலையணிவித்தனர். மதுரை கிழக்கு ஒன்றியச்செயலர்ஏ.பி.ரகுபதி, மேலூர் ஒன்றியச்செயலர் வ.ரெகுபதி, மேலூர் நகர் செயலர் முகமதுயாசின், மாவட்ட கலை இலக்கியஅணி மாவட்டஅமைப்பாளர் கலைவாணன், தலைமைக் கழக பேச்சாளர் அலெக்சாண்டர் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com