தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த ஐந்து பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை தெப்பக்குளம் போலீஸார் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த ஆனையூரைச் சேர்ந்த முத்துபிரகாஷ் (24), கிருஷ்ணன் (19), சுந்தரவடிவேல் (46), இளஞ்சேகரன் (57), மானராஜன் (59) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 900 புகையிலைப் பொட்டலங்கள் மற்றும் ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.