மதுரை வண்டியூர் பகுதியில் செப்டம்பர் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மதுரை மின்பகிர்மான வடக்கு பெருநகர் வட்டச் செயற்பொறியாளர் ஜீ. மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வண்டியூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும், வண்டியூர், பி.கே.எம்.நகர், மானகிரி, செளராஷ்டிரபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான் நகர், பாண்டியன்கோட்டை, பாண்டிகோவில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர் பகுதி, வீரபாஞ்சான், பூலான்குளம், ஆண்டார்கொட்டாரம், ஒத்தவீடு, இளமனூர், புதூர், எல்.கே.டி. நகர், கல்மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.