புதுப்பிக்கப்பட்ட காவலர் மருத்துவமனை திறப்பு

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட  மருத்துவமனையை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட  மருத்துவமனையை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனையில் ரூ.17 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், மாநகரக்காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இங்கு ரத்த பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகர ணங்கள் சுத்திகரிப்பு மையம், 10 படுக்கை வசதிகள், டெங்கு கண்டறியும் பரிசோதனை கருவிகள், உடற்பரிசோதனை கூடம், மருந்தகம், மருந்துகள் வைப்பதற்கான குளிர்சாதன அறை ஆகியவை உள்ளன. 
இவ்விழாவில் துணை ஆணையர்கள் சசிமோகன், மகேஷ், அருண் பாலகோபாலன், ஈஸ்வரன் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com