மத்திய எரிசக்தி துறையின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் அலுவல்சாரா இயக்குநராக பாஜக மாநில மகளிரணித் தலைவியான ஏ.ஆர். மகாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இவரை, மத்திய எரிசக்தி துறையின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அலுவல்சாரா இயக்குநராக நியமித்து, எரிசக்தி துறையின் செயலர் பி.பி.எஸ்.தின்கர் உத்தரவிட்டுள்ளார். புதுதில்லியில் உள்ள பவர் கிரிட் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், இப்பொறுப்பில் 3 ஆண்டுகள் செயல்படுவார். மதுரை திரும்பிய இவரை, பாஜக மகளிரணியினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.