மதுரை-திருவனந்தபுரம் விரைவு ரயில் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மதுரை-திருவனந்தபுரம் விரைவு ரயிலின் (எண்-16344) பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ரயில் மதுரை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பிற்பகல் 3.45 மணிக்கு பதிலாக, மாலை 5.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.