தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக்கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சட்டக்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கே.கே.ராஜா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் சிறப்பு சிறை, 9 மாவட்ட சிறை, 95 கிளைச் சிறை, 3 திறந்தவெளிச்  சிறை, 3 
பெண்கள்  கிளைச் சிறை, 12 இளஞ்சிறார் சிறைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 966 தண்டனை கைதிகளும், 9 ஆயிரத்து 156 விசாரணை கைதிகளும் உள்ளனர்.
 ஆண் கைதிகளுக்கு பல்வேறு சிறைகள் இருந்தபோதும், 3 திறந்தவெளி சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கைதிகள் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை கொண்ட கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுகின்றனர். இங்குள்ள கைதிகள் மனரீதியான முன்னேற்றம் அடைகின்றனர். அங்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. 
இதனால் அவர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும்போது நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ஆனால் இந்த வசதி பெண் கைதிகளுக்கு இல்லை. எனவே தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு செய்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com