பூச்சியியல் துறை வல்லுநர் டி.வி.ராமகிருஷ்ணஅய்யர் நினைவு கருத்தரங்கம், புத்தக வெளியீட்டு விழா மதுரை வேளாண்மைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பேராசிரியர் குணதிலகராஜ் எழுதிய, மேதை டி.வி. ராமகிருஷ்ணஅய்யர் என்ற புத்தகத்தை மத்திய மேற்கு ஆசியாவின் பன்னாட்டு பல்லுயிர் பரவுதல் மையத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கெ.ராமசாமி பெற்றுக்கொண்டார்.அவர் பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், போக்குவரத்து வசதி, ஆய்வுக்கூட வசதி என அடிப்படை வசதிகள் இல்லாத காலத்தில், ஒடிஸா முதல் தமிழகம் வரையில் சுற்றிவந்து இந்திய பூச்சியியல் துறையில் ராமகிருஷ்ணஅய்யர் பல்வேறு ஆய்வுகள் செய்துள்ளார் என்றார். கல்லூரி முதல்வர் சீ.சுரேஷ் வரவேற்றார். பூச்சியியல்துறை பேராசிரியர் சி.சின்னையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.