மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அழகர்கோவில் அருகேயுள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிகுமார் (32). இவரது தனது நண்பர் அழகுராஜாவுடன் தும்பைப்பட்டி அருகே பூதமங்கலத்தில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும்நள்ளிரவு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். தும்பைப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ஜோதிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அழகுராஜா மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.