தேசிய கேரம் போட்டியில் சிஇஓஏ பள்ளி மாணவி சிறப்பிடம்

தேசிய அளவிலான கேரம் போட்டியில் சிஇஏஏ பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான கேரம் போட்டியில் சிஇஏஏ பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளனர்.
 தேசிய அளவிலான மிக இளையோருக்கான கேரம் போட்டிகள் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக சிஇஓஏ பள்ளி மாணவி ஏ.ரித்திகா பங்கேற்றார். இதில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், ரித்திகா தனி நபர் பிரிவில் தேசிய அளவில் நான்காமிடம் பிடித்தார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பாக நடைபெற்ற போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை வென்றார். 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் சிஇஓஏ பள்ளி மாணவி கே.சுருதி தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றார். 
 இவர்களை பள்ளித் தலைவர் மை.ராஜா கிளைமாக்சு, இணைத் தலைவர் இ.சாமி, துணைத் தலைவர் எம்.பாக்கியநாதன், செயலர் ஜெயச்சந்திர பாண்டியன், இயக்குநர்கள் எம்.விக்டர்தன்ராஜ், சௌந்திரபாண்டி, அசோக்ராஜ், பொருளாளர் பிரகாஷ், பள்ளி முதுநிலை முதல்வர் சி.ஹேமா ஆட்ரே, ஐ.நசீம் பானு  ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com