குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

மதுரை அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.அரசப்பட்டி கிராமத்தைச் சேரந்தவர் சின்னச்சாமி. இவரது மகள் முனியம்மாள் (24). இவருக்கும் பேரையூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஈஸ்வரி (2) என்ற பெண் குழுந்தை உள்ளது. திருமணம் முடிந்து பத்து மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதனால் குழந்தையுடன் தன் தாய் வீட்டில் முனியம்மாள் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் சனிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, தாயையும், குழந்தையையும் காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது ஊரின் அருகே இருந்த கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்துள்ளது. மேலும் குழந்தையுடன் சேர்ந்து முனியம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com