பாவை விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசு

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருப்பாவை, திருவெண்பாவை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருப்பாவை, திருவெண்பாவை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நாள்தோறும் காலையில் நடைபெற்றது. இதில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருப்பாவை, திருவெண்பாவை பாராயணம் செய்து, ஆண்டாளை தரிசித்தனர். மார்கழி மாதத்தில் அனைத்து நாள்களிலும் கோயிலுக்கு வருகை தந்து பாராயணம் செய்த 125 பேருக்கு கோயில் சார்பில் பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ர. பச்சையப்பன் தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். கோயில் கணக்கர் இதயராஜன் வரவேற்றார். காவல் உதவி ஆணையர் ஆ. மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.கே. பலராமன், திருநகர் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.எஸ். பாலமுருகன், கோயில் குருக்கள் சீனிவாசன், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com