முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பெற புதிய வசதி

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட 4 ரயில் நிலையங்களில், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கான

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட 4 ரயில் நிலையங்களில், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகளை பெறும் வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
      கீழ்மதுரை, பாம்பன், மேட்டூர், கீழபுலியூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு இருக்கைகள் மற்றும் முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்குப் பயணச் சீட்டுகளைப் பெறலாம்.
    பாம்பன் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 8.30,  9.30 முதல் பிற்பகல் 1,  பிற்பகல் 3.30 முதல் இரவு 7.30 வரை முன்பதிவு செய்யலாம்.
    கீழ்மதுரை ரயில் நிலையத்தில் காலை 8 முதல் நண்பகல் 12,  பிற்பகல் 2 முதல் இரவு 7 வரை முன்பதிவு செய்யலாம்.
   மேட்டூர் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 11.30,  பிற்பகல் 3  முதல் மாலை 4 வரை முன்பதிவு செய்யப்படும்.
   கீழபுலியூர் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 11.30,  பிற்பகல் 3  முதல் மாலை 4 வரை முன்பதிவு செய்யப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com