தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட 4 ரயில் நிலையங்களில், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகளை பெறும் வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கீழ்மதுரை, பாம்பன், மேட்டூர், கீழபுலியூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு இருக்கைகள் மற்றும் முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்குப் பயணச் சீட்டுகளைப் பெறலாம்.
பாம்பன் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 8.30, 9.30 முதல் பிற்பகல் 1, பிற்பகல் 3.30 முதல் இரவு 7.30 வரை முன்பதிவு செய்யலாம்.
கீழ்மதுரை ரயில் நிலையத்தில் காலை 8 முதல் நண்பகல் 12, பிற்பகல் 2 முதல் இரவு 7 வரை முன்பதிவு செய்யலாம்.
மேட்டூர் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 11.30, பிற்பகல் 3 முதல் மாலை 4 வரை முன்பதிவு செய்யப்படும்.
கீழபுலியூர் ரயில் நிலையத்தில் காலை 8 முதல் 11.30, பிற்பகல் 3 முதல் மாலை 4 வரை முன்பதிவு செய்யப்படும்.