சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முன்னாள் எஸ்.ஐ கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஆத்திகுளம் குறிஞ்சிநகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் திரவியம் (69). காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் அளித்தப்புகாரின் பேரில் தல்லாகுளம் மகளிர் போலீஸார் திரவியத்திடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரவியம் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com