உலகக் கோப்பை துப்பாக்கி  சுடும் போட்டி:  மேலூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் மார்ச் 19 முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் மார்ச் 19 முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆங்கிலவியல்துறை பேராசிரியர் கிறிஸ்டோபர் தெரிவித்திருப்பதாவது: மேலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலவியல்துறையில் மூன்றாம் ஆண்டு மாணவரான சாம்ராஜ்சஜன், மதுரை ரைபிள் கிளப் உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற இந்திய அணிக்கான தேர்வு போட்டிகளில் பங்கேற்றார். அதில் தேசிய அளவில் தரவரிசையில் இரண்டாமிடம் பெற்று இந்திய அணியில் இடம் பெறத் தேர்வுபெற்றுள்ளார்.
மேலும் மதுரை ரைபிள் கிளப் உறுப்பினரான மதுரை பிளஸ் 2 வகுப்பு மாணவர் மிதிலேஸ் தேசியத் தரவரிசையில் மூன்றாமிடம் பெற்று தேர்வுபெற்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com