தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திங்கள்கிழமை சந்தித்தார்.
மதுரை மாவட்டம் சந்தையூரில் உள்ள இந்திரா காலனியில் கோயில் அருகே உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கடந்த 49 நாள்களாக அங்குள்ள மலைப்பகுதிக்கு சென்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தையூர் மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக கோயில் சுற்றுச் சுவரை கட்டியவர்களிடம் நேரில் சென்று பேசினார்.