மேலூரில் மில்ட்டன் மெட்குலேசன் பள்ளியில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜய் பங்கேற்று, சாலை விதிகள், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது, வாகனத்தில் பக்கவாட்டு கண்ணாடி பொருத்துவது ஆகிவற்றின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.
பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மேலூர் வட்டாரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாஹீராஉசேன் மற்றும் போலீஸார், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.