மேலூர் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
மேலூர் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த சகாதேவன் மனைவி ராஜேஸ்வரி (46). இவர் தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் . அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மூவர், ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 7.5 நகையைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
இச்சம்பவம் குறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.