பெரியகுளம், பிஎஸ்டி விளையாட்டரங்கில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் 15 வயதுக்குள்பட்டோருக்கான கோடை காலப் பயிற்சி முகாம் பெரியகுளம், தென்கரை, பிஎஸ்டி விளையாட்டரங்கில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. பயிற்சி காலை 6 முதல் 8 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.