கம்பத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
எர்ணாகுளம் மாவட்டம், புதுவையைச் சேர்ந்தவர் அசோகன் மகன் அருண்குமார் (26). திருச்சூர் மாவட்டம், கொடுங்காநல்லூரைச் சேர்ந்தவர் காதர் அலி மகன் சலாம் (34). இவர்களை கம்பம், கோம்பைச் சாலை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அருண்குமார், சலாம் ஆகியோருக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த மாயாண்டி மகன் ஜெயபாண்டி (37) என்பவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.