பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். விழுதுகள் இளைஞர் மன்ற பொருளாளர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். மேரிமாதா கல்லூரி முதல்வர் ஐசக்.பிஜே சிறப்புரையாற்றினார். பெரியகுளம் வட்டாட்சியர் பெ.ராணி வாழ்த்திப் பேசினார்.
வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஆனந்தி, தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் எடுத்துக் கொண்டனர். அதன் பின் அவர் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேரிமாதா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.