தேனியில் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

தேனியில் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை செய்துகொண்டதாக,  காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனியில் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை செய்துகொண்டதாக,  காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி கே.ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் சரஸ்வதி (32). இவருக்கும், தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு, கருஷ்தா(4) என்ற பெண் குழந்தை உள்ளது. இந் நிலையில், சரஸ்வதிக்கு  3 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.    
தேனியில் தனது தந்தை  வீட்டில் இருந்து வந்த சரஸ்வதி, பிரசவத்துக்கு பின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, கருஷ்தாவை அழைத்துக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்று வருவதாக தனது தந்தையிடம் கூறிவிட்டுச் சென்ற சரஸ்வதி,  திரும்பவும் வீட்டுக்கு வரவில்லையாம்.
 அதையடுத்து, சரஸ்வதி தனது மகள் கருஷ்தாவுடன் தேனி காட்டு பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
 தகவலறிந்து  சம்பவ இடத்துக்குச் சென்ற தேனி போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள்,  கிணற்றிலிருந்து சரஸ்வதி, கருஷ்தா ஆகியோரின் சடலத்தை மீட்டனர்.
இது குறித்து சரஸ்வதியின் தந்தை லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com