மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் சாவு

தேனி அருகே வியாழக்கிழமை வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.

தேனி அருகே வியாழக்கிழமை வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.
 அரண்மனைப்புதூர் முல்லைநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3-ஆவது மாடியில் வசித்து வருபவர் ஜெகதீஷ் (38). இவரது மனைவி சாந்தி (31). மகன் சாம்ஒபேத் (13).
 சாந்தி தனது வீட்டு பால்கனியில் துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்ததாராம். அப்போது, அருகில் நின்றிருந்த சாம்ஒபேத் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
 இதுகுறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com