கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை விடுவிக்க வலியுறுத்தி கம்பம் வ.உ.சி., திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். ஊழலுக்கு எதிராக கருத்து தெரிவித்த கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தும், கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை கண்டித்தும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை விடுவிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.