போடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை(ஜூலை 27) மாதாந்திர பாராமரிப்புப் பணி நடைபெற உள்ளன.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை, போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் சி. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.