தேனி மாவட்டம், கோம்பையில் தென்னை நார் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடினர்.
உத்தமபாளையம் அடுத்த கோம்பையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு, ராணிமங்கம்மாள் சாலையில் தென்னை நார் ஆலை உள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப் பிடித்து எரிந்தது. தகவலின்பேரில், உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலத்த காற்று வீசியதால், தீயை கட்டுக்குள் கொண்டுவர போரானர்.
மேலும், கம்பம் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர்.