போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ் மகன் கனகராஜ் (39). இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் இரவில் தனது மோட்டார் சைக்கிளை வைத்து வெளிப்பக்க இரும்புக் கதவை பூட்டியிருந்தார்.
மறுநாள் காலையில் பைக்யை காணவில்லை. இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை போலீஸார் நடத்திய வாகன சோதனையில் போடி பத்திரகாளிபுரத்தை சேர்ந்த ராமராஜ் மகன் அய்யனார் (26) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரிந்தது.
அவரை போலீஸார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.