வீட்டில் தவறி கீழே விழுந்து சிறுவன் சாவு

பெரியகுளத்தில் வீட்டில் டைல்ஸ் கல் வழுக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

பெரியகுளத்தில் வீட்டில் டைல்ஸ் கல் வழுக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
 தேனி, அல்லிநகரை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு சாய்பிரியன் (2) மற்றும் சாய்சரண் (2) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரன் பெரியகுளத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஜூன் 16ஆம் தேதி வந்துள்ளார். அப்போது சாய் பிரியன் வீட்டில் உள்ள டைல்ஸ் கல் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தான். உடனே சாய் பிரியனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை சாய் பிரியன் உயிரிழந்தான். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com