தேனியில் பயிற்சி மருத்துவர் மாயம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர் காணாமல் போய் விட்டதாக வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர் காணாமல் போய் விட்டதாக வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்து, பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் அரியலூர் மாவட்டம், ராயபுரம் அருகே வெல்லூரைச் சேர்ந்த சேகர் மகன் சிவராஜன் (25). மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர், தனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு, காப்பாளரிடம் தகவல் தெரிவிக்காமல் விடுதியை விட்டுச் சென்று விட்டாராம்.  இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், க.விலக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com