பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (70). இவர் புதன்கிழமை அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் பலத்தகாயமடைந்த அவரை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.