கம்பத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கை பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திங்கள்கிழமை, சார்பு ஆய்வாளர் கதிரேசன் காவலர்களுடன் ரோந்து சென்றார். 

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கை பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திங்கள்கிழமை, சார்பு ஆய்வாளர் கதிரேசன் காவலர்களுடன் ரோந்து சென்றார். 
அப்போது இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக மணிகட்டி ஆலமர பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். 
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்த சிங்கராஜா (61), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த ராஜூ மகன் அபிஜித் (24) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் 2.50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com