பெரியகுளம் அருகே திரவியம் கல்வியியல் கல்லூரியில், கணினி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பால் தலைமை வகித்தார். தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனர் ப. மணிகண்டன், கணினி பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார். மேலும், கணினி குறித்த குறும்படம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.