பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி நாகராணி (25). தம்பதி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
சருத்துப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் நாகராணி வசித்து வருகின்றார். இந்த நிலையில், நாகராணி கடந்த 5 ஆம் தேதி தனது தாயார் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த 5
பவுன் நகையை காணவில்லையாம்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.