தேனி அல்லிநகர, வீரப்பஅய்யனார் கோயிலில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் நவநீதன். இவர், வீரப்பஅய்யனார் கோயிலில் பூசாரியாக உள்ளார். நவநீதன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, தேனி எம்.ஜி.ஆர். நகர், 2-வது தெருவைச் சேர்ந்த உத்தண்டராஜன் மகன் அஸ்வின் (19) என்பவர், கோயில் வளாகத்தில் பித்தளை குடத்தில் செய்து வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து நவநீதன் அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனர்.