பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுகாதார விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சில்வார்பட்டியில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்டஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஐசக் தலைமை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் பிலோய் முன்னிலை வகித்தார்.
இதில் வட்டாரவளச்சி அலுவலர் சேதுக்குமார் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஆதிஸ்வரன் செய்திருந்தார்.