தேனியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசு கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசை கண்டித்தும், கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு தூய்மைப் பணிக்கு நிரந்தரமாக ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தியும் அப்போது கோஷமிடப்பட்டது. மாவட்டச் செயலர் நாகரத்தினம், மாநில அமைப்பாளர் எல்லாளன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலர் தமிழன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.