பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலி பெண் மருத்துவரை தேவதானப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் எல்ஸ்சம்மாள் இம்மானுவேல் (35). இவர் முறையாக மருத்துவம் பயிலாமல் தேவதானப்பட்டியில் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்து வந்தார். இதனையறிந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் செல்வராஜ், அப்பகுதியில் ஆய்வு செய்து, அந்த போலி பெண் மருத்துவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். தேவதானப்பட்டி போலீஸார் போலி பெண் மருத்துவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.