போடி திருவள்ளுவர் திடலில் வியாழக்கிழமை மாலை, நவோதயா பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை கண்டித்து தேனி மாவட்ட பா.ஜக. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தேனி மாவட்டத் தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். போடி நகர இளைஞரணித் தலைவர் வெங்கடேஷ், போடி நகர பா.ஜ.க. தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலர்கள் சக்திவேல், குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். தேனி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொதுச் செயலர் தேவகுமார் நன்றி கூறினார்.