ஹைவேவிஸ்- மேகமலை கிராமங்களிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அதே போல மணலார், மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, மேகமலை உள்ளிட்ட இடங்களில் நடமாடும் மருத்துவக் குழு மூலம் நடத்தப்பட்ட முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு சஞ்சீவி மகப்பேறு பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த முகாமிற்கு, டாடா தனியார் மருத்துவமனை மருத்துவர் அன்பரசி, அரசு மருத்துவர் அன்புநாதன், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் வின்ஸ்டன் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.