தேனியில் நாளை சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 25) பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 25) பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் நிர்வாக அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com