தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது தனியார் பேருந்து மோதியதில் கொத்தனார் ஒருவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.
கம்பத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அனிதாஸ் (32), கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேகமலை அருகே மகாராஜாமெட்டிலிருந்து சின்னமனூரை நோக்கி சென்ற தனியார் பேருந்து, அனிதாஸ் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மேலும் ஈஸ்வரன் மகன் அபிமன்யூ (18) பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஹைவேவிஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.