தேனியில் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை அக்கட்சியின் மாவட்டச் செயலர் நா.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், விவசாயத் தொழிலாளர் அணி மாநிலத் தலைவர் எல்.மூக்கையா, முன்னாள் எம்.பி. கம்பம் பெ.செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. போடி எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தியும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர். தேனி நகர திமுக பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.