தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப்.14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்காபுரம், செல்லாயிபுரம், மேட்டுபட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் ம. சிவமுருகன் தெரிவித்தார்.