பெரியகுளத்தில் போலி பீடி தயாரித்தவர் கைது

பெரியகுளத்தில் போலி பீடி தயாரித்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

பெரியகுளத்தில் போலி பீடி தயாரித்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
 பெரியகுளத்தைச் சேர்ந்த சையதுமுகமது, திருநெல்வேலியை சேர்ந்த தர்மராஜ், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மன் மற்றும் சுரேஷ் ஆகியோர் திருநெல்வேலியை சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்து விற்பதாக, அந்த பீடி நிறுவனத்தின் தேனி பகுதி மேலாளர் அற்புதநாதன், பெரியகுளம் காவல்நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் சோதனை செய்து 40 போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலி பீடி தயாரித்ததாக சையது முகமதுவை கைது செய்து மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com