உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது. அதன்படி, வியாழக்கிழமை ரோந்து சென்ற போலீஸார், அப்பகுதியில் மது விற்ற அனுமந்தன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த முதியவர் தொந்தி (64) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரிடமிருந்து ரூ. 9,800 மதிப்புள்ள 95 மதுபாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.