தேனியில் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆகியவற்றின் சார்பில் வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு பகுதியில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை உறவின்முறைத் தலைவர் ஆர்.முருகன் தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், கல்லூரிச் செயலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வரை ஊர்வலம் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கல்லூரி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர், தேனி- மதுரை சாலையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தொடக்கி வைத்தார். தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.சேக்முகமது, உறவின்முறை வாகன பராமரிப்பு பிரிவு செயலர் கே.ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.