பெண் சார்பு-ஆய்வாளரை மிரட்டியவர் கைது

பெரியகுளத்தில் பெண் சார்பு-ஆய்வாளரை மிரட்டியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பெரியகுளத்தில் பெண் சார்பு-ஆய்வாளரை மிரட்டியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம் காவல் நிலையத்தில் பெண் சார்பு-ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜெயபாண்டி. இவர், சனிக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழைய பேருந்து நிலையப் பிரிவில் போக்குவரத்துக்கு இடையூறாக கனகராஜ் (37) என்பவர் கரும்புக் கடை வைத்திருந்தாராம். அதனை அகற்ற வலியுறுத்திய ஜெயபாண்டிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் கனகராஜ். இது குறித்து சார்பு-ஆய்வாளர் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீஸார் கனராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com