உத்தமபாளையம் அருகே மகனை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் திங்கள்கிழமை மகனை கத்தியால் குத்திக் கொன்று தந்தை தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் திங்கள்கிழமை மகனை கத்தியால் குத்திக் கொன்று தந்தை தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
   க.புதுப்பட்டியை சேர்ந்த ஆண்டவர்(32). இவரது மனைவி ப்ரியா(21). இவர்களுக்கு 4 வயதில் ஆனந்த் என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில், திங்கள்கிழமை  ஆண்டவர், தனது மகனை கத்தியால் குத்திக் கொலை செய்தாராம். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலின் பேரில் உத்தபாளையம் போலீஸார்  அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆண்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து மகன் மற்றும் தந்தை ஆகிய இருவரது சடலங்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  கொண்டு செல்லப்பட்டது.,
மேலும், உத்தமபாளையம் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com